حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، – وَاللَّفْظُ لِسَعِيدٍ – أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا يَقُولُ :
قَالَ رَجُلٌ أَيْنَ أَنَا يَا رَسُولَ اللَّهِ إِنْ قُتِلْتُ قَالَ “ فِي الْجَنَّةِ ” . فَأَلْقَى تَمَرَاتٍ كُنَّ فِي يَدِهِ ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ
وَفِي حَدِيثِ سُوَيْدٍ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ
ஒருவதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “நான் (அறப்போரில்) கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்), “சொர்க்கத்தில்” என்று பதிலளித்தார்கள். அவர் உடனே தமது கையிலிருந்த பேரீச்சங் கனிகளை தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து) கொல்லப்படும்வரை போரிட்டார்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
ஸுவைத் பின் ஸஈத் (ரஹ்) வழி அறிவிப்பில், “உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டார்” என இடம்பெற்றுள்ளது.