அத்தியாயம்: 33, பாடம்: 56, ஹதீஸ் எண்: 3556

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَطْرُقَ الرَّجُلُ أَهْلَهُ لَيْلاً يَتَخَوَّنُهُمْ أَوْ يَلْتَمِسُ عَثَرَاتِهِمْ


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الإِسْنَادِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ سُفْيَانُ لاَ أَدْرِي هَذَا فِي الْحَدِيثِ أَمْ لاَ ‏.‏ يَعْنِي أَنْ يَتَخَوَّنَهُمْ أَوْ يَلْتَمِسَ عَثَرَاتِهِمْ ‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي قَالاَ، جَمِيعًا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِكَرَاهَةِ الطُّرُوقِ وَلَمْ يَذْكُرْ يَتَخَوَّنُهُمْ أَوْ يَلْتَمِسُ عَثَرَاتِهِمْ ‏‏

இரவு நேரத்தில் (வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர், தம் வீட்டாரின் நம்பகத் தன்மையை சந்தேகித்து, அவர்களின் குற்றங்குறைகளை உளவு பார்க்கும் நோக்கத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

“வீட்டாரின் நம்பகத் தன்மையை சந்தேகித்து, அவர்களின் குற்றங்குறைகளை உளவு பார்க்கும் நோக்கத்தில் …” எனும் இந்த சொற்றொடர் ஹதீஸில் உள்ளதா? (அறிவிப்பாளர் முஹாரிபுடையதா) என எனக்குத் தெரியவில்லை” என்று ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறியதாக அப்துர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) வெறுத்து வந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

“வீட்டாரின் நம்பகத் தன்மையை சந்தேகித்து, அவர்களின் குற்றங்குறைகளை உளவு பார்க்கும் நோக்கத்தில் … ” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment