அத்தியாயம்: 34, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3557

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ :‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ فَيُمْسِكْنَ عَلَىَّ وَأَذْكُرُ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَقَالَ ‏”‏ إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَكُلْ ‏”‏ ‏.‏ قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ ‏”‏ وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مَعَهَا ‏”‏ ‏.‏ قُلْتُ لَهُ فَإِنِّي أَرْمِي بِالْمِعْرَاضِ الصَّيْدَ فَأُصِيبُ فَقَالَ ‏”‏ إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ فَخَزَقَ فَكُلْهُ وَإِنْ أَصَابَهُ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْهُ ‏”‏ ‏.‏

நான் “அல்லாஹ்வின் தூதரே! நான் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்புகிறேன். அவை எனக்காக(வேட்டையாடி)க் கவ்விப் பிடிக்கின்றன (அவற்றை நான் உண்ணலாமா?)” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “நீங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியிருந்தால் உண்ணலாம்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அவை (வேட்டைப் பிராணியைக்) கொன்றுவிட்டாலுமா?” என்று கேட்டேன். “அவை (வேட்டைப் பிராணியைக்) கொன்றுவிட்டாலும் நீங்கள் அனுப்பாத வேறு நாய் அவற்றுடன் (வேட்டையில்) கூட்டுச் சேராதவரை (அதை நீங்கள் உண்ணலாம்)” என்றார்கள்.

நான், “இறகு இல்லாத அம்பை வேட்டைப் பிராணியின் மீது நான் எய்கிறேன். அது வேட்டைப் பிராணியைத் தாக்கிக் கொன்றுவிடுகிறது (அதை நான் உண்ணலாமா)?” என்று கேட்டேன். “நீங்கள் எய்யும் இறகு இல்லாத அம்பு (தனது கூர்முனையால்) குத்தி(வீழ்த்தி)யதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றதை உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

Share this Hadith:

Leave a Comment