அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3626

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ :‏ ‏

ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَبْدِلْهَا ‏”‏ ‏‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدِي إِلاَّ جَذَعَةٌ – قَالَ شُعْبَةُ وَأَظُنُّهُ قَالَ – وَهِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اجْعَلْهَا مَكَانَهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي وَهْبُ بْنُ جَرِيرٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَمْ يَذْكُرِ الشَّكَّ فِي قَوْلِهِ هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ ‏.‏

அபூபுர்தா (ரலி) (எனும் என் தாய்மாமா பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பலிப் பிராணியை) அறுத்துவிட்டார்கள். நபி (ஸல்), “அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்து பலி கொடு)ப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அபூபுர்தா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதற்குப் பதிலாக இதை அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

“அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்” என்று அபூபுர்தா (ரலி) சொன்னதாக நான் எண்ணுகின்றேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

அபூஆமிர் அல் அகதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் என்று அபூபுர்தா (ரலி) சொன்னதாக நான் எண்ணுகின்றேன்” என ஷுஅபா (ரஹ்) ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment