அத்தியாயம்: 35, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3630

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ ضَحِّ بِهِ أَنْتَ ‏”‏ ‏.‏ قَالَ قُتَيْبَةُ عَلَى صَحَابَتِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சில பலிப் பிராணிகளை என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று எஞ்சியது. அது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, “அதை நீரே (அறுத்து) பலி கொடுப்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


குறிப்பு :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், தம் தோழர்களுக்கு என்பதைக் குறிக்க ‘அலா அஸ்ஹாபிஹி’ என்பதற்குப் பதிலாக, (அதே பொருள் தரும்) ‘அலா ஸஹாபத்திஹி’ எனும் சொற்றொடர் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment