அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3790

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ قَالاَ حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ ‏‏ قَالَ وَقَالَ ‏”‏ إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ ‏”‏ ‏.‏ وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ قَالَ ‏”‏ فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதேனும் உணவை உண்டால் (இறுதியில்) மூன்று விரல்களை சூப்பிக்கொள்வார்கள். மேலும், “உங்களில் ஒருவரது உணவுக் கவளம் (உண்ணும் போது) கீழே விழுந்துவிட்டால், அதில் பட்டதை நீக்கி(சுத்தப்படுத்தி)விட்டு, உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்” என்றும் அவர்கள் கூறினார்கள்.

உணவுத் தட்டையும் இறுதியில் வழித்து உண்ணுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். “ஏனெனில் உங்களின் எந்த உணவில் அருள்வளம் உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment