وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْتَبَذَ فِيهِ
قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ ” . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்தித்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்.
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) வழியாகவும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்துள்ளார்.
அதில், “சுரைக்குடுவையில் பானங்களை ஊற்றிவைக்காதீர்கள். தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் ஊற்றிவைக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். கூடுதலாக, “மண் சாடிகளையும் தவிர்த்துவிடுங்கள்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.