அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3690

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا نُوحُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِوَفْدِ عَبْدِ الْقَيْسِ ‏ “‏ أَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ – وَالْحَنْتَمُ الْمَزَادَةُ الْمَجْبُوبَةُ – وَلَكِنِ اشْرَبْ فِي سِقَائِكَ وَأَوْكِهِ ‏”‏

நபி (ஸல்), அப்துல் கைஸ் தூதுக் குழுவினரிடம், “சுரைக்குடுவை, மண் சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். வேண்டுமானால், தோல் பைகளிலிருந்து (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக்கொள்க. அதன் வாய்ப் பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment