அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3692

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ :‏

قُلْتُ لِلأَسْوَدِ هَلْ سَأَلْتَ أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا يُكْرَهُ أَنْ يُنْتَبَذَ فِيهِ قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَخْبِرِينِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُنْتَبَذَ فِيهِ ‏.‏ قَالَتْ نَهَانَا أَهْلَ الْبَيْتِ أَنْ نَنْتَبِذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ أَمَا ذَكَرَتِ الْحَنْتَمَ وَالْجَرَّ قَالَ إِنَّمَا أُحَدِّثُكَ بِمَا سَمِعْتُ أَأُحَدِّثُكَ مَا لَمْ أَسْمَعْ

நான் அஸ்வது பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், “குடிபானங்களை எந்தப் பாத்திரத்தில் ஊற்றி வைப்பது வெறுக்கப்பட்டது என நீங்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா- ரலி) அவர்களிடம் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள் “ஆம்; இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரங்களில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்? என்று நான் கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘நபி (ஸல்) தம் இல்லத்தாராகிய எங்களிடம் சுரைக் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்’ என்று விடையளித்தார்கள்” என்றார்கள்.

நான் (மீண்டும்) “மண் சாடியையும் சுட்ட களிமண் பாத்திரத்தையும் ஆயிஷா (ரலி) குறிப்பிடவில்லையா?” என அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்), “நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் கேட்காதவற்றை உங்களுக்கு அறிவிப்பேனா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment