அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3710

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏ قَالَ سَمِعْتُهُ غَيْرَ مَرَّةٍ ‏


وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ ‏.‏ قَالَ وَأُرَاهُ قَالَ وَالنَّقِيرِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மண்சாடி, சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இதை நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செவியுற்றுள்ளேன்” என்று அறிவிப்பாளர் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) கூறுகின்றார்.

மேலும், “இப்னு உமர் (ரலி) பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்தையும் (சேர்த்துக்) குறிப்பிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்” என ஷைபானி (ரஹ்) வழி அறிவிப்பில் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment