அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3721

وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا ضَحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ وَإِنَّ الظُّرُوفَ – أَوْ ظَرْفًا – لاَ يُحِلُّ شَيْئًا وَلاَ يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏”‏

“பாத்திரங்கள் சிலவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன்.  பாத்திரங்கள் அல்லது (சிலவகைப்) பாத்திரம் எந்த ஒரு பானத்தையும் அனுமதிக்கப்பட்டதாகவோ தடை செய்யப்பட்டதாக ஆக்குவதில்லை. போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

Share this Hadith:

Leave a Comment