حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :
“ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَلَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ فَلَمْ يُسْقَهَا ”
قِيلَ لِمَالِكٍ رَفَعَهُ قَالَ نَعَمْ
“உலகில் மது அருந்தி வாழ்ந்து, அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் பாக்கியம் மறுக்கப்படும்; அது அவருக்குப் புகட்டப்படமாட்டாது” என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)
குறிப்பு :
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்) கூறுகின்றார்:
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் “இந்த ஹதீஸை நபி (ஸல்) கூறியதாக நாஃபிஉ (ரஹ்) குறிப்பிட்டார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு மாலிக் (ரஹ்), “ஆம்” என்றார்கள்.