அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3845

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى قَالَ :‏

اسْتَسْقَى حُذَيْفَةُ فَسَقَاهُ مَجُوسِيٌّ فِي إِنَاءٍ مِنْ فِضَّةٍ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ تَلْبَسُوا الْحَرِيرَ وَلاَ الدِّيبَاجَ وَلاَ تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا‏”‏‏

ஹுதைஃபா (ரலி) பருகுவதற்குத் தண்ணீர் கேட்டபோது, நெருப்பு வணங்கி (மஜூசி) ஒருவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்தார். அப்போது ஹுதைஃபா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஆடையாக) சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணிய வேண்டாம். பொன்/வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாம். பொன்/வெள்ளித் தட்டுகளில் உண்ண வேண்டாம். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கு உரியவை ஆகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment