அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3851

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ خَلِيفَةَ بْنِ كَعْبٍ أَبِي ذُبْيَانَ قَالَ :‏ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يَخْطُبُ يَقُولُ أَلاَ لاَ تُلْبِسُوا نِسَاءَكُمُ الْحَرِيرَ فَإِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَلْبَسُوا الْحَرِيرَ فَإِنَّهُ مَنْ لَبِسَهُ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ ‏”‏ ‏‏

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) உரை நிகழ்த்துகையில் “நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், “பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்)


குறிப்பு :

“நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள்” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையல்ல; மாறாக, அது, இப்னு அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் கருத்தாகும். காண்க : ஹதீஸ் 3847.

Share this Hadith:

Leave a Comment