அத்தியாயம்: 37, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3909

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، – فِيمَا قُرِئَ عَلَيْهِ – عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَأْكُلَ الرَّجُلَ بِشِمَالِهِ أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ ‏

ஒருவர் தமது இடக் கையால் உணவு உண்பதற்கும், அல்லது ஒரேயொரு காலணியில் நடப்பதற்கும், ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும், ஒரே துணியால் போர்த்திக் கொண்டு இன உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்புகள் :

* இஷ்தி மாலுஸ் ஸம்மாஉ:
ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது.

** இஹ்திபா :
ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்வது.

Share this Hadith:

Leave a Comment