அத்தியாயம்: 37, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3867

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَيُّوبَ الْمَوْصِلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ :‏

رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَىَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ ‏”‏ أَأُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا ‏”‏  قُلْتُ أَغْسِلُهُمَا ‏.‏ قَالَ ‏”‏ بَلْ أَحْرِقْهُمَا ‏”‏

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்), “உன் தாயார் இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உனக்குக் கட்டளையிட்டாரா?” என்று கேட்டார்கள். நான், “அவ்விரண்டையும் கழுவி(செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்” என்றேன். நபி (ஸல்) “வேண்டாம், அவ்விரண்டையும் எரித்துவிடு” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment