அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3982

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمَّيْتُ ابْنَتِي بَرَّةَ فَقَالَتْ لِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ :‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ هَذَا الاِسْمِ وَسُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ ‏”‏ ‏.‏ فَقَالُوا بِمَ نُسَمِّيهَا قَالَ ‏”‏ سَمُّوهَا زَيْنَبَ ‏”‏

நான் என் மகளுக்கு, பர்ரா (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு ‘பர்ரா’ என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு ஸைனப் எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி) வழியாக முஹம்மது பின் அம்ரு பின் அதாஉ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment