அத்தியாயம்: 38, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3983

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ – وَاللَّفْظُ لأَحْمَدَ – قَالَ الأَشْعَثِيُّ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ ‏”‏ ‏.‏ زَادَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ ‏”‏ لاَ مَالِكَ إِلاَّ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏.‏ قَالَ الأَشْعَثِيُّ قَالَ سُفْيَانُ مِثْلُ شَاهَانْ شَاهْ ‏.‏ وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ سَأَلْتُ أَبَا عَمْرٍو عَنْ أَخْنَعَ فَقَالَ أَوْضَعَ ‏‏

“அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒருவன் ‘மலிக்குல் அம்லாக்’ மன்னாதி மன்னன் என்று சூட்டிக்கொண்ட பெயராகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “சர்வ வல்லமையும் மாண்பும் மிக்க அரசன் என்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் பின் அம்ரு அல்அஷ்அஸீ (ரஹ்), “மலிக்குல் அம்லாக் என்பதற்கு, (பாரசீக மொழியில்) ஷாஹான்-ஷாஹ் (மன்னாதி மன்னன்) என்று ஸுஃப்யான் (ரஹ்) (பொருள்) கூறினார்கள்” என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளரான இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:

நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ரு இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம், இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘அக்னஉ’ எனும் சொல் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அதற்கு ‘அவ்ளஉ’ (மிகவும் கீழ்த்தரமானது) என்று பெருள்” என விடையளித்தார்கள்.

Share this Hadith:

Leave a Comment