அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3986

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ ابْنٌ لأَبِي طَلْحَةَ يَشْتَكِي فَخَرَجَ أَبُو طَلْحَةَ فَقُبِضَ الصَّبِيُّ فَلَمَّا رَجَعَ أَبُو طَلْحَةَ قَالَ مَا فَعَلَ ابْنِي قَالَتْ أُمُّ سُلَيْمٍ هُوَ أَسْكَنُ مِمَّا كَانَ ‏.‏ فَقَرَّبَتْ إِلَيْهِ الْعَشَاءَ فَتَعَشَّى ثُمَّ أَصَابَ مِنْهَا فَلَمَّا فَرَغَ قَالَتْ وَارُوا الصَّبِيَّ ‏.‏ فَلَمَّا أَصْبَحَ أَبُو طَلْحَةَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ ‏”‏ أَعْرَسْتُمُ اللَّيْلَةَ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ قَالَ ‏”‏ اللَّهُمَّ بَارِكْ لَهُمَا ‏”‏ ‏.‏ فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَ لِي أَبُو طَلْحَةَ احْمِلْهُ حَتَّى تَأْتِيَ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَبَعَثَتْ مَعَهُ بِتَمَرَاتٍ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَمَعَهُ شَىْءٌ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ تَمَرَاتٌ ‏.‏ فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَضَغَهَا ثُمَّ أَخَذَهَا مِنْ فِيهِ فَجَعَلَهَا فِي فِي الصَّبِيِّ ثُمَّ حَنَّكَهُ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ ‏‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، بِهَذِهِ الْقِصَّةِ نَحْوَ حَدِيثِ يَزِيدَ ‏

அபூ தல்ஹா (ரலி) அவர்களின் குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தது. அபூதல்ஹா (ரலி) (வெளியூருக்குச்) சென்றிருந்தபோது, அக்குழந்தை இறந்துவிட்டது. அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்து (என் தாய் உம்மு ஸுலைமிடம்) “என் குழந்தை என்ன செய்கின்றான்?” என்று கேட்டார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி) (துக்கத்தை வெளிக் காட்டாமல்) “அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கின்றான்” என்று பதிலளித்துவிட்டு, கணவருக்கு முன்னால் இரவு உணவை வைத்தார்.

அபூதல்ஹா (ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு (அன்றிரவு) மனைவியுடன் உறவு கொண்டார்கள். உறவு கொண்ட பின், உம்மு ஸுலைம் (ரலி) (தம் கணவரிடம்), “குழந்தையை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள்.

(அப்போதுதான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இறந்துவிட்ட செய்தி தெரிந்தது.) விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நேற்றிரவு உறவில் ஈடுபட்டீர்களா?” என்று கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி), “ஆம்“ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! இந்த இருவருக்கும் வளம் (பரக்கத்) வழங்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் உம்மு ஸுலைம் (ரலி) ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) என்னிடம், “குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன்.

என்னிடம் உம்மு ஸுலைம் (ரலி) கொடுத்தனுப்பிய பேரீச்சம் பழங்கள் சில இருந்தன. நபி (ஸல்) என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, “இக்குழந்தைக்குக் கொடுக்க ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள், “ஆம், பேரீச்சம் பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவற்றை வாங்கி (தமது வாயால்) மென்று, பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவியபின் அக்குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

நபித் தோழர் அனஸ் (ரலி) அவர்களின் தந்தை மாலிக் மரணித்த பின்னர், அபூதல்ஹா (ரலி) எனும் நபித் தோழருக்கு மனைவியானார் அனஸ் (ரலி) அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) (http://www.satyamargam.com/articles/history/thozhiyar/thozhiyar-1/)

Share this Hadith:

Leave a Comment