அத்தியாயம்: 39, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4011

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ ‏” قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ ‏” قَالُوا وَمَا حَقُّهُ قَالَ ‏”‏ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ ‏”


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ هِشَامٍ، – يَعْنِي ابْنَ سَعْدٍ – كِلاَهُمَا عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏

நபி (ஸல்), “நீங்கள் நடைபாதைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று (ஒரு முறை) கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாதே!. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கின்றோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “நீங்கள் (அங்கு) அமர்ந்துதான் ஆகவேண்டும் எனில், நடைபாதைக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கி விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நடைபாதையின் உரிமைகள் யாவை?” என்று வினவினர். நபி (ஸல்), “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நன்மை செய்ய ஏவுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4010

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ قَالَ قَالَ أَبُو طَلْحَةَ :‏

كُنَّا قُعُودًا بِالأَفْنِيَةِ نَتَحَدَّثُ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَامَ عَلَيْنَا فَقَالَ ‏”‏ مَا لَكُمْ وَلِمَجَالِسِ الصُّعُدَاتِ اجْتَنِبُوا مَجَالِسَ الصُّعُدَاتِ ‏” فَقُلْنَا إِنَّمَا قَعَدْنَا لِغَيْرِ مَا بَاسٍ قَعَدْنَا نَتَذَاكَرُ وَنَتَحَدَّثُ ‏.‏ قَالَ ‏”‏ إِمَّا لاَ فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ وَرَدُّ السَّلاَمِ وَحُسْنُ الْكَلاَمِ ‏”

நாங்கள் தெருவோரங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து எங்களிடையே நின்று, “ஏன் தெருவோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருக்கின்றீர்கள்? தெருவோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் “தேவையை முன்னிட்டே அமர்கின்றோம். (இங்கு அமர்ந்துதான் பலவற்றைக் குறித்து நாங்கள் பேசிக்கொள்கின்றோம்; கலந்துரையாடுகின்றோம்)” என்று கூறினோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தெருவோரங்களில் அமர்வதைத் தவிர்க்க முடியாது எனில், நடைபாதைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும் முகமனுக்குப் பதிலுரைப்பதும் நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமைகள்) ஆகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)