அத்தியாயம்: 39, பாடம்: 24, ஹதீஸ் எண்: 4071

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ :‏

أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ ‏.‏ ثَلاَثًا ‏.‏ وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,  தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, பிஸ்மில்லாஹ் என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை, ‘அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு’ என்று சொல்வீராக” என்றார்கள்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) வழியாக நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment