அத்தியாயம்: 39, பாடம்: 26, ஹதீஸ் எண்: 4074

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ :‏

عَادَ الْمُقَنَّعَ ثُمَّ قَالَ لاَ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ فِيهِ شِفَاءً” ‏

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), முகன்னஉ பின் ஸினான் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, “குருதி உறிஞ்சி (ஹிஜாமா) எடுத்துக்கொள்ளாத வரை உங்களை நான் விடப்போவதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அதில் நிவாரணம் உள்ளது என்று சொன்னதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment