அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 594

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَخَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏غَيْلَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ ‏
‏صَلَّيْتُ أَنَا ‏ ‏وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏خَلْفَ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنْ الرَّكْعَتَيْنِ كَبَّرَ فَلَمَّا انْصَرَفْنَا مِنْ الصَّلَاةِ قَالَ أَخَذَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏بِيَدِي ثُمَّ قَالَ لَقَدْ ‏ ‏صَلَّى بِنَا هَذَا صَلَاةَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ قَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلَاةَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

(ஒருமுறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் ஸஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) அவர்கள் எனது கையைப் பிடித்து ‘நமக்கு இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார்’ என்றோ ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்தி விட்டார்’ என்றோ சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 593

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّهُ كَانَ ‏ ‏يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُ ذَلِكَ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்து வந்ததாக அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 592

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏كَانَ ‏ ‏يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا رَفَعَ وَوَضَعَ فَقُلْنَا يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏مَا هَذَا التَّكْبِيرُ قَالَ إِنَّهَا لَصَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், “அபூஹுரைரா! இது என்ன தக்பீர்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 591

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنْ الرُّكُوعِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنْ الْمَثْنَى بَعْدَ الْجُلُوسِ ثُمَّ يَقُولُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏إِنِّي أَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏كَانَ حِينَ يَسْتَخْلِفُهُ ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَفِي حَدِيثِهِ فَإِذَا قَضَاهَا وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் (தொடக்க) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா வ லக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு ஸஜ்தாவுக்காகத் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் பின்னர் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்து விட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். பின்னர், “தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)

குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ் அபூபக்ரு பின் அப்திர்ரஹ்மான் அல் ஹாரிஸ் (ரஹ்) வழியிலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள்” எனத் தொடங்கித் தொடர்கிறது. ஆனால், (தொழுகின்ற முறையில்) உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறையோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்ட இறுதிப் பகுதி அதில் இடம்பெறவில்லை.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுனராக நியமித்திருந்தபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமையான தொழுகையைத் தொழுவிக்கத் தொடங்கும்போது (தொடக்க) தக்பீர் கூறுவார்கள்” எனத் தொடங்கித் தொடர்கிறது. அதன் இறுதியில், “தொழுது முடித்து விட்டு ஸலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்து கொண்டு, ‘என் உயிர் கையிலுள்ளவன் மீது ஆணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 590

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏كَانَ ‏ ‏يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ فَلَمَّا انْصَرَفَ قَالَ وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையின்) ஒவ்வொரு நிலைமாற்றத்தின் போதும் தக்பீர் கூறி மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். அவ்வாறு (ஒருபோது) தொழுது முடிந்ததும், “அல்லாஹ் மீதாணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)