அத்தியாயம்: 4, பாடம்: 15, ஹதீஸ் எண்: 608

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جُحَادَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏وَمَوْلًى لَهُمْ ‏ ‏أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏وَائِلِ بْنِ حُجْرٍ ‏
‏أَنَّهُ رَأَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ ‏ ‏وَصَفَ ‏ ‏هَمَّامٌ ‏ ‏حِيَالَ أُذُنَيْهِ ‏ ‏ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنْ الثَّوْبِ ثُمَّ رَفَعَهُمَا ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَلَمَّا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ فَلَمَّا سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ ‏

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.

பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக்கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்யும்போது தம் கைகளை ஆடையிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து) “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும்போதும் தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு ஸஜ்தாச் செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(ளை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)

குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள், “கைகளை உயர்த்தியது இரு காதுகளுக்கு நேராக” என்று விவரித்தார்கள்.