அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 710

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

صَلَّى ‏ ‏مُعَاذُ بْنُ جَبَلٍ الْأَنْصَارِيُّ ‏ ‏لِأَصْحَابِهِ الْعِشَاءَ فَطَوَّلَ عَلَيْهِمْ فَانْصَرَفَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنَّا فَصَلَّى فَأُخْبِرَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏عَنْهُ فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَلَمَّا بَلَغَ ذَلِكَ الرَّجُلَ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَهُ مَا قَالَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُرِيدُ أَنْ تَكُونَ فَتَّانًا يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏إِذَا أَمَمْتَ النَّاسَ فَاقْرَأْ ‏ ‏بِالشَّمْسِ وَضُحَاهَا ‏ ‏وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏

முஆத் பின் ஜபல் அல்அன்ஸாரி (ரலி), தம் தோழர்க(ளான எங்க)ளுக்கு (ஒரு நாள்) இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீளமான அத்தியாயத்தை ஓதித் தொழுகையை) நீட்டினார். எனவே, எங்களில் ஒருவர் விலகிச் சென்று தனியாகத் தொழுதார். இதுபற்றித் தெரிவிக்கப்பட்டபோது, “அவர் ஒரு முனாஃபிக்” என்று முஆத் (ரலி) கூறினார்.

இச்செய்தி (விலகிச் சென்று தொழுதவருக்கு) எட்டியது. அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று முஆத் (ரலி) கூறியதைத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆத்! நீர் குழப்பவதியாக இருக்க விரும்புகின்றீரா? நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்போது வஷ்ஷம்ஸி வளுஹாஹா, ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க, வல்லைலி இதா யக்’ஷா ஆகிய (சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment