அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 725

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ ‏ ‏غَلَبَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏رَجُلٌ قَدْ سَمَّاهُ زَمَنَ ‏ ‏ابْنِ الْأَشْعَثِ ‏ ‏فَأَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَكَانَ ‏ ‏يُصَلِّي فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَامَ قَدْرَ مَا أَقُولُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ ‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏يَقُولُا ‏

كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرُكُوعُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَسُجُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنْ السَّوَاءِ ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏فَقَالَ قَدْ رَأَيْتُ ‏ ‏ابْنَ أَبِي لَيْلَى ‏ ‏فَلَمْ تَكُنْ صَلَاتُهُ هَكَذَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏أَنَّ ‏ ‏مَطَرَ بْنَ نَاجِيَةَ ‏ ‏لَمَّا ظَهَرَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏أَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை (நிலை), அவர்களது ருகூஉ, ருகூவிலிருந்து தலைநிமிர்த்தி எழுந்து நிற்றல், அவர்களது ஸஜ்தா, இரு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட அமர்வு ஆகியன ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) வழியாக ஹகம் பின் உபைதா (ரஹ்).

குறிப்பு :

“இப்னுல் அஷ்அஸ் காலத்தில் (இராக்கிலுள்ள) கூஃபா நகரை, (மத்தர் பின் நாஜியா எனும் பெயருடைய) ஒருவர் வெற்றி கொண்டார். அவர், அபூஉபைதா பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார். அவ்வாறே அபூஉபைதா (ரஹ்) தொழவித்து வந்தார். அவர் தொழுகையில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தினால், ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅத் அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி. லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்’ என்று நான் சொல்லும் அளவிற்கு நிற்பார்” என்று ஹகம் பின் உபைதா (ரஹ்) சொல்லிக் கொண்டு வரும்போது, மேற்காணும் ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா கூறியதாகக் குறிப்பிடப் படுகின்றது.

“மத்தர் பின் நாஜியா என்பார் கூஃபா நகரை வெற்றி கொண்டபோது அபூஉபைதா (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார் …” (எனும் தகவலுடன் கூடிய) “இந்த ஹதீஸை நான் அம்ரு பின் முர்ரா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், ‘நான் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்க(ளது தொழுகைக)ளைப் பார்த்திருக்கிறேன். அவர்களது தொழுகை அவ்வாறு அமைந்திருக்கவில்லை’ என்று கூறினார்” என்று ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

Share this Hadith:

Leave a Comment