و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
أُمِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ وَنُهِيَ أَنْ يَكُفَّ شَعْرَهُ وَثِيَابَهُ
هَذَا حَدِيثُ يَحْيَى و قَالَ أَبُو الرَّبِيعِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَنُهِيَ أَنْ يَكُفَّ شَعْرَهُ وَثِيَابَهُ الْكَفَّيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَالْجَبْهَةِ
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். தமது தலைமுடி ஆடை ஆகியவற்றை(ஸஜ்தாவின்போது தரையில் படாதவாறு)ப் பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்பு:
அபுர்ரபீஉ(ரஹ்) அறிவிப்பில், “இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு (ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாமென்றும் தடை விதிக்கப்பட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.
தலைமுடியைக் கொண்டை போட்டு முடிந்து முன்நெற்றிப்பக்கம் எடுத்துவிட்டுக் கொள்வது அக்கால அரபியரிடம் இருந்தவொரு பழக்கமாகும்.