அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 779

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا جُحَيْفَةَ ‏ ‏قَالَ ‏

خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْهَاجِرَةِ ‏ ‏إِلَى ‏ ‏الْبَطْحَاءِ ‏ ‏فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ ‏ ‏عَنَزَةٌ ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَزَادَ فِيهِ ‏ ‏عَوْنٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَبِي جُحَيْفَةَ ‏ ‏وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏الْحَكَمِ ‏ ‏فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் பத்ஹா வெளியை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் உளூச் செய்துவிட்டு லுஹ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து அஸ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)

குறிப்பு :

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்கள் மற்றும் கழுதைகள் (உள்ளிட்ட கால் நடைகள்) கடந்து சென்று கொண்டிருந்தன” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டி போட்டனர்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment