அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 785

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ ‏ ‏يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَارِّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي ‏ ‏قَالَ ‏ ‏أَبُو جُهَيْمٍ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً ‏

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ الْأَنْصَارِيِّ ‏ ‏مَا سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

“தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்குக் குறுக்கே கடந்து செல்வதைவிட நாற்பது (நாட்கள்/ மாதங்கள்/ஆண்டுகள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நன்மை பயப்பதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் (ரலி)

குறிப்பு:

“ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள், (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) அபூஜுஹைம் (ரலி) என்ன செவியுற்றிருக்கிறார்கள் என்று கேட்டு வருமாறு என்னை அனுப்பினார்கள். (நான் சென்று கேட்டபோது) அபூஜுஹைம் (ரலி) அவர்கள் மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள்” என்று புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

“புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிட்ட நாற்பது என்பது நாள்களா?, மாதங்களா?, ஆண்டுகளா? என்பது எனக்குத் தெரியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுந்நள்ரு ஸாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) கூறுகின்றார்.

வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் அபூஜுஹைம் அல்அன்ஸாரீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) என்ன செவியுற்றிருக்கிறார் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அனுப்பினார்கள் என புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment