وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ :
هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ . وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّي . وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي . وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِي غُلاَمِي ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் ரப்புக்கு (அதிபதிக்கு) பருக நீர் கொடு, உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு” என்றெல்லாம் கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) ‘ரப்பீ’ என்று கூற வேண்டாம். மாறாக, ‘ஸய்யிதீ’, ‘மவ்லாய’ என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண் டாம். மாறாக, ஃபத்தாய (என் பணியாள்) ஃபத்தாத்தீ (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)
குறிப்பு :
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.