அத்தியாயம்: 43, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4275

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنِ ابْنِ عُلَيَّةَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَى عَلَى أَزْوَاجِهِ وَسَوَّاقٌ يَسُوقُ بِهِنَّ يُقَالُ لَهُ أَنْجَشَةُ فَقَالَ ‏ “‏ وَيْحَكَ يَا أَنْجَشَةُ رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ ‏”‏ ‏.‏ قَالَ قَالَ أَبُو قِلاَبَةَ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَلِمَةٍ لَوْ تَكَلَّمَ بِهَا بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ ‏

நபி (ஸல்) (ஒரு பயணத்தில்) தம் துணைவியரிடம் வந்தார்கள். அப்போது ‘அன்ஜஷா’ எனும் ஒட்டகவோட்டி ஒருவர், துணைவியர் அமர்ந்திருந்த ஒட்டகங்களை (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்), “கேடுகெட்ட அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) (இராக்வாசிகளிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இங்கு) ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார்கள். அதையே உங்களில் ஒருவர் சொல்லியிருந்தால், அதற்காக அவரை நீங்கள் கேலி செய்திருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

(இராக்வாசிகள், பிறரைக் கேலி பேசுவதில் ஆர்வமுடையவர்கள். பெண்களை, கண்ணாடிக் குடுவைகளுக்கு உவமையாக்கி நபி (ஸல்) கூறியதுபோல் வேறு யாராவது உவமித்திருந்தால் அவர்களை இராக்கியர்கள் தம் கேலியினால் உண்டு, இல்லை என்றாக்கியிருப்பார்கள். யதார்த்தத்தில் “பெண்கள் என்போர், கண்ணாடிக் குடுவைகள்போல் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய மென்மையானவர்கள்“ எனும் ஆழமான பொருள் நிறைந்த உவமையை இராக்கியர் உய்த்துணர மாட்டார்கள் – தக்மிலா & ஃபத்ஹு).

Share this Hadith:

Leave a Comment