அத்தியாயம்: 43, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4316

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، كِلاَهُمَا عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، ح وَحَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ قَالَ :‏

رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَكَلْتُ مَعَهُ خُبْزًا وَلَحْمًا – أَوْ قَالَ ثَرِيدًا – قَالَ فَقُلْتُ لَهُ أَسْتَغْفَرَ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ وَلَكَ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏{‏وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ‏}‏ قَالَ ثُمَّ دُرْتُ خَلْفَهُ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ عِنْدَ نَاغِضِ كَتِفِهِ الْيُسْرَى جُمْعًا عَلَيْهِ خِيلاَنٌ كَأَمْثَالِ الثَّآلِيلِ ‏

அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), “நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடன் ரொட்டியும் இறைச்சியும் / தக்கடி உணவும் சாப்பிட்டேன்” என்று கூறினார்கள்.

அவர்களிடம் நான், “உங்களுக்காக நபி (ஸல்) பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), “ஆம்; உங்களுக்கும்தான் (பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள்)” என்று கூறிவிட்டு, “(நபியே!) உம்முடைய பாவத்திற்காகவும் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!” எனும் (47:19) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

மேலும் கூறினார்கள்: “பிறகு நான் நபி (ஸல்) அவர்க(ளுடைய முதுகு)க்குப் பின்னே சுற்றிவந்தேன். அப்போது அவர்களுடைய இரு தோள்பட்டைகளுக்கிடையே இடது தோளின் மேற்புறத்தில் கை முஷ்டியைப் போன்று (துருத்திக்கொண்டும்) கொப்புளங்களைப் போன்று தழும்பாகவும் உள்ள நபித்துவ முத்திரையைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment