அத்தியாயம்: 43, பாடம்: 42, ஹதீஸ் எண்: 4359

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ أَنْبَأَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ :‏

كَانَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ رَجُلاً حَيِيًّا – قَالَ – فَكَانَ لاَ يُرَى مُتَجَرِّدًا – قَالَ – فَقَالَ بَنُو إِسْرَائِيلَ إِنَّهُ آدَرُ – قَالَ – فَاغْتَسَلَ عِنْدَ مُوَيْهٍ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَانْطَلَقَ الْحَجَرُ يَسْعَى وَاتَّبَعَهُ بِعَصَاهُ يَضْرِبُهُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ ‏.‏ حَتَّى وَقَفَ عَلَى مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ وَنَزَلَتْ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا‏}‏

மூஸா (அலை) மிகவும் வெட்கப்படுபவராக இருந்தார்கள். ஆகவே, நிர்வாணமாக அவர்கள் காணப்படவேமாட்டார்கள். எனவே, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் “மூஸாவுக்கு விரைவீக்கம் உள்ளது” என்று (கற்பனையாகக்) கூறிக்கொண்டனர்.

இந்நிலையில் மூஸா (அலை) தமது ஆடையை ஒரு கல்மீது வைத்துவிட்டு, ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல் (ஆடையோடு) விரைந்தோடலாயிற்று. மூஸா (அலை) தமது தடியால் அதை அடித்துக்கொண்டு, “கல்லே! எனது ஆடை, கல்லே! எனது ஆடை!” என்று கூறிக்கொண்டே அதை விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.

இறுதியில் அந்தக் கல் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் பிரமுகர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று நின்றது. (இது குறித்தே) “நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” எனும் (33:69) இறைவசனம் அருளப்பெற்றது

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment