அத்தியாயம்: 44, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4382

وَحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ سَمِعْتُ عَائِشَةَ :‏

وَسُئِلَتْ مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَخْلِفًا لَوِ اسْتَخْلَفَهُ قَالَتْ أَبُو بَكْرٍ ‏.‏ فَقِيلَ لَهَا ثُمَّ مَنْ بَعْدَ أَبِي بَكْرٍ قَالَتْ عُمَرُ ‏.‏ ثُمَّ قِيلَ لَهَا مَنْ بَعْدَ عُمَرَ قَالَتْ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏.‏ ثُمَّ انْتَهَتْ إِلَى هَذَا ‏

ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) தம் பிரதிநிதியாக ஒருவரை நியமிப்பதாயிருந்தால் யாரை நியமிப்பார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி), “அபூபக்ரு (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். “அபூபக்ருக்குப் பிறகு யாரை?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “உமர் (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். “உமருக்குப் பிறகு யாரை?” என்று கேட்கப்பட்டபோது, “அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை” என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்னு அபீமுளைக்கா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment