அத்தியாயம்: 44, பாடம்: 19, ஹதீஸ் எண்: 4477

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا بِشْرٌ، – يَعْنِي ابْنَ السَّرِيِّ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذِهِ الْغُمَيْصَاءُ بِنْتُ مِلْحَانَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ ‏”‏

“நான் (கனவில்) சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு காலடியோசை ஒன்றைக் கேட்டு, “இவர் யார்?” என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், “இவர்தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த்தி மில்ஹான்” என்று பதிலளித்தனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

உம்முஸுலைம் (ரலி) அவர்களின் இயற்பெயர் ருமைஸா (பின்த்தி மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா) என்பதாகும். ருமைஸாவுக்கு வேறு சில பெயர்களும் உண்டு: ஃகுமைஸா, ஸஹ்லா, ருமைலா, ருமைத்தா, மலிக்கா ஆகிய பெயர்களும் அவருக்கு இருந்தன. என்றாலும், வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம் என்பதாகும்.

Share this Hadith: