அத்தியாயம்: 44, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4403

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَعُبَيْدُ اللَّهِ الْقَوَارِيرِيُّ وَسُرَيْجُ بْنُ يُونُسَ كُلُّهُمْ عَنْ يُوسُفَ الْمَاجِشُونِ، – وَاللَّفْظُ لاِبْنِ الصَّبَّاحِ – حَدَّثَنَا يُوسُفُ، أَبُو سَلَمَةَ الْمَاجِشُونُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعَلِيٍّ ‏ “‏ أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلاَّ أَنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي ‏”‏


قَالَ سَعِيدٌ فَأَحْبَبْتُ أَنْ أُشَافِهَ بِهَا سَعْدًا فَلَقِيتُ سَعْدًا فَحَدَّثْتُهُ بِمَا حَدَّثَنِي عَامِرٌ فَقَالَ أَنَا سَمِعْتُهُ ‏.‏ فَقُلْتُ آنْتَ سَمِعْتَهُ فَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى أُذُنَيْهِ فَقَالَ نَعَمْ وَإِلاَّ فَاسْتَكَّتَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம், “மூஸாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில்  என்னிடம் நீங்கள் இருக்கின்றீர்கள். எனினும், எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) கூறுகின்றார்: இந்த ஹதீஸை (ஸஅத் (ரலி) கூறியதாக ஆமிர் பின் ஸஅத் (ரஹ்) அறிவிக்கக் கேட்டேன். எனினும்,) நான் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே நேரடியாகச் செவியுற விரும்பினேன்.

ஆகவே, நான் ஸஅத் (ரலி) அவர்களைச் சந்தித்து, எனக்கு ஆமிர் (ரஹ்) அறிவித்த ஹதீஸை  அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஸஅத் (ரலி) “நான் இதை (நபியவர்களிடமிருந்து) செவியுற்றேன்” என்று கூறினார்கள். ”நீங்கள் இதைச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அப்போது ஸஅத் (ரலி) தம் இரு விரல்களைத் தம் காதுக்குள் வைத்து “ஆம் (நான் செவியுற்றேன்); இல்லாவிட்டால் இவ்விரண்டும் செவிடாகப் போகட்டும்!” என்று கூறினார்கள்.

Share this Hadith:

Leave a Comment