அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 844

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏حَدَّثَكَ ‏ ‏عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي وَهُوَ حَامِلٌ ‏ ‏أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلِأَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ ‏ ‏فَإِذَا قَامَ حَمَلَهَا وَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏نَعَمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேத்தியான குழந்தை) உமாமாவை(த்தம் தோளில்) சுமந்து கொண்டு தொழுவார்கள். உமாமா, நபி (ஸல்) அவர்களின் புதல்வி ஸைனபு-அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ தம்பதியரின் மகளாவார். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமந்திருப்பார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

குறிப்பு:

“இந்த ஹதீஸை, அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து >அம்ரு பின் ஸுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும் அம்ரு அவர்களிடமிருந்து > ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் > உங்களுக்கு அறிவித்தார்களா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்” என்று யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment