அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 899

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏قَالَ

‏سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنْ الْعَصْرِ ثُمَّ قَامَ فَدَخَلَ الْحُجْرَةَ فَقَامَ رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ فَخَرَجَ مُغْضَبًا فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்று ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து (பள்ளியை ஒட்டியிருந்த) தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைகளை உடைய ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

Share this Hadith:

Leave a Comment