அத்தியாயம்: 5, பாடம்: 28, ஹதீஸ் எண்: 942

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَثَابِتٌ ‏ ‏وَحُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏
‏أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ ‏ ‏حَفَزَهُ ‏ ‏النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ ‏ ‏فَأَرَمَّ ‏ ‏الْقَوْمُ فَقَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ ‏ ‏حَفَزَنِي ‏ ‏النَّفَسُ فَقُلْتُهَا فَقَالَ ‏ ‏لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا ‏ ‏يَبْتَدِرُونَهَا ‏ ‏أَيُّهُمْ ‏ ‏يَرْفَعُهَا

ஒருவர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் இணைந்து கொண்டு, “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி (தூய்மையும் வளமும் நிறைந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்ததும், “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று மீண்டும் கேட்டார்கள். உடனே அவர், “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே இதை (அல்லாஹ்விடம்) எடுத்துச் செல்பவர் யார் எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment