அத்தியாயம்: 5, பாடம்: 33, ஹதீஸ் எண்: 976

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُهَاجِرًا أَبَا الْحَسَنِ ‏ ‏يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ‏ ‏زَيْدَ بْنَ وَهْبٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏

أَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالظُّهْرِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَبْرِدْ ‏ ‏أَبْرِدْ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏انْتَظِرْ انْتَظِرْ وَقَالَ إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ ‏ ‏فَيْحِ ‏ ‏جَهَنَّمَ فَإِذَا اشْتَدَّ الْحَرُّ ‏ ‏فَأَبْرِدُوا ‏ ‏عَنْ الصَّلَاةِ ‏

قَالَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏حَتَّى رَأَيْنَا ‏ ‏فَيْءَ ‏ ‏التُّلُولِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை அழைப்பாளர், லுஹ்ருத் தொழுகைக்கு அழைப்புவிடுக்க முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும், வெப்பம் தணியட்டும்” அல்லது “பொறுங்கள், பொறுங்கள்” என்று கூறிவிட்டு, “கடுமையான சூடு என்பது நரக நெருப்புடைய பெருமூச்சின் பாற்பட்டது. சூடு கடுமையாக இருக்கும்போது அது தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்!” என்று கூறினார்கள்.

(தொழுகை தொடங்கும்போது) குன்றுகள்மீது நிழல் விழுந்திருப்பதை நாங்கள் கண்டோம் (அந்த அளவுக்குத் தாமதப் படுத்தித் தொழுதோம்).

அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment