அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 999

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفُضَيْلُ بْنُ مَرْزُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ ‏ ‏وَصَلَاةِ الْعَصْرِ فَقَرَأْنَاهَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ فَنَزَلَتْ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏ فَقَالَ رَجُلٌ كَانَ جَالِسًا عِنْدَ شَقِيقٍ لَهُ هِيَ إِذَنْ صَلَاةُ الْعَصْرِ فَقَالَ ‏ ‏الْبَرَاءُ ‏ ‏قَدْ أَخْبَرْتُكَ كَيْفَ نَزَلَتْ وَكَيْفَ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ وَاللَّهُ أَعْلَمُ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَاهُ ‏ ‏الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏ ‏قَرَأْنَاهَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَمَانًا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ‏

“அனைத்துத் தொழுகைகளையும் அஸ்ருத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்றுதான் இந்த (2:238ஆவது) வசனம் (முதலில்) அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதி்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தை, “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்று மாற்றி அருளினான் என்று பராஉ பின் ஆஸிப் (ரலி) கூறினார்கள்.

இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்துக்கொண்டிருந்தபோது) அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பராஉ (ரலி) அவர்களிடம், “அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ருத் தொழுகையையே குறிக்கிறது” என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள், “அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது; பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக ஷகீக் பின் உக்பா (ரஹ்)

குறிப்பு :

அல் அஸ்வத் பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கொஞ்சகாலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்” என்று பராஉ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment