அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 823

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ قَالَتْ فَلَوْلَا ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَلَوْلَا ذَاكَ لَمْ يَذْكُرْ قَالَتْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
அந்த அறிவிப்பு (எச்சரிக்கை மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத் தலம் திறந்தவெளியில் விடப்பட்டிருக்கும். ஏனெனில், அவர்களது அடக்கத் தலம் (பிற்பாடு) வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

இபுனு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு குறிப்பிடாமல் (எச்சரிக்காமல்) இருந்திருந்தால் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment