அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1012

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزُ بْنُ أَسَدٍ الْعَمِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏

أَنَّهُمْ سَأَلُوا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ خَاتَمِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَخَّرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ ذَاتَ لَيْلَةٍ إِلَى ‏ ‏شَطْرِ ‏ ‏اللَّيْلِ أَوْ كَادَ يَذْهَبُ ‏ ‏شَطْرُ ‏ ‏اللَّيْلِ ثُمَّ جَاءَ فَقَالَ ‏ ‏إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمْ الصَّلَاةَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏خَاتَمِهِ مِنْ فِضَّةٍ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُسْرَى بِالْخِنْصِرِ

அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரை/பாதி இரவு கழியும்வரை தாமதப்படுத்தினார்கள். அதன்பிறகு வந்து, ‘மக்கள் (பலர்) தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)’ என்று சொன்னார்கள். அப்போது அவர்களது விரலில் மின்னிய வெள்ளி மோதிரம் இப்போதும் என் மனக்கண்ணில் காட்சியளிக்கிறது” என்று கூறிவிட்டு, அனஸ் (ரலி) தமது இடக் கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment