அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1030

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏بُدَيْلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْعَالِيَةِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَضَرَبَ فَخِذِي ‏ ‏كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قَالَ مَا تَأْمُرُ قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ اذْهَبْ لِحَاجَتِكَ فَإِنْ أُقِيمَتْ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் தொடையில் தட்டி, “தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீ் தங்க நேரிட்டால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். “நான் (அச்சூழலில்) என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதற்கு உரிய நேரத்தில் தொழுது கொள். பிறகு உனது (பிற) தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போகலாம். நீ பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்கு(த் தாமதமாக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், அப்போதும் நீ (ஜமாஅத்தோடு இணைந்து) தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment