அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1081

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏قَالَ ‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَا وَصَاحِبٌ لِي ‏ ‏فَلَمَّا أَرَدْنَا ‏ ‏الْإِقْفَالَ ‏ ‏مِنْ عِنْدِهِ قَالَ لَنَا ‏ ‏إِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ قَالَ ‏ ‏الْحَذَّاءُ ‏ ‏وَكَانَا مُتَقَارِبَيْنِ فِي الْقِرَاءَةِ

நானும் என் நண்பர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (சில நாட்கள் அங்குத் தங்கியிருந்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல விரும்பியபோது எங்களிடம் அவர்கள், “தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்கு அழையுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)

குறிப்பு :

ஹஃப்ஸ் பின் கியாஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இருவரும் சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தனர்” என காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment