அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 834

حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَ

صَلَّيْتُ إِلَى جَنْبِ ‏ ‏أَبِي ‏ ‏فَلَمَّا رَكَعْتُ شَبَّكْتُ أَصَابِعِي وَجَعَلْتُهُمَا بَيْنَ رُكْبَتَيَّ فَضَرَبَ يَدَيَّ فَلَمَّا صَلَّى قَالَ قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَ إِلَى الرُّكَبِ

நான் என் தந்தையின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்த போது என் இரு கைவிரல்களைக் கோத்து என் முழங்கால்களுக்கிடையே வைத்துக் கொண்டேன். அவர்கள் என் கைகள் மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும் “நாங்களும் (முன்னர்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம்; பின்னர் முழங்கால்களுக்கு (இடையில் வைத்த) கைகளை ஏற்றி, (முழங்கால்களின் மீது) வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அபு (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 833

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ

رَكَعْتُ فَقُلْتُ بِيَدَيَّ هَكَذَا ‏ ‏يَعْنِي ‏ ‏طَبَّقَ ‏ ‏بِهِمَا وَوَضَعَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَقَالَ ‏ ‏أَبِي ‏ ‏قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا بِالرُّكَبِ

நான் (தொழுகையில்) இவ்வாறு கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு ருகூஉச் செய்தபோது, என் தந்தை, “நாங்கள் (உன்போல்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அபு (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 832

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏

‏صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي قَالَ وَجَعَلْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَبِي ‏ ‏اضْرِبْ بِكَفَّيْكَ عَلَى رُكْبَتَيْكَ قَالَ ثُمَّ فَعَلْتُ ذَلِكَ مَرَّةً أُخْرَى فَضَرَبَ يَدَيَّ وَقَالَ إِنَّا نُهِينَا عَنْ هَذَا وَأُمِرْنَا أَنْ نَضْرِبَ بِالْأَكُفِّ عَلَى الرُّكَبِ ‏

‏حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ إِلَى قَوْلِهِ ‏ ‏فَنُهِينَا عَنْهُ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ ‏

நான் என் தந்தையின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே வைத்துக் கொள்ளலானேன். உடனே என் தந்தை, “உன் உள்ளங்கைகளை முழங்கால்கள் மீதுவை” என்று சொன்னார்கள். நான் மீண்டும் (முன்னர் செய்த) அவ்வாறே செய்தேன். அவர்கள் என் கைகள் மீது அடித்துவிட்டு, “இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அபு (ரஹ்)

குறிப்பு :

1. ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது” என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

2. தொடக்கக்காலத் தொழுகையின் இடையிடையே ஒருவருக்கொருவர் கட்டாயங் கருதி பேசிக் கொண்டதாக அறிய முடிகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 831

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏إِسْرَائِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏

‏أَنَّهُمَا دَخَلَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَصَلَّى مَنْ خَلْفَكُمْ قَالَ نَعَمْ فَقَامَ بَيْنَهُمَا وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ ثُمَّ رَكَعْنَا فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَضَرَبَ أَيْدِيَنَا ثُمَّ ‏ ‏طَبَّقَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ ثُمَّ جَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நாங்கள் இருவரும், “ஆம்” என்றோம். அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக் கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டார்கள். தொழுது முடித்ததும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) & அல்கமா (ரஹ்).

குறிப்பு :

ஹதீஸ் எண் 830இன் இரண்டாவது குறிப்பைக் காண்க.

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 830

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَعَلْقَمَةَ ‏ ‏قَالَا ‏ ‏أَتَيْنَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏فِي دَارِهِ فَقَالَ أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ فَقُلْنَا لَا قَالَ فَقُومُوا فَصَلُّوا فَلَمْ يَأْمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ ‏

‏قَالَ وَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ فَأَخَذَ بِأَيْدِينَا فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ قَالَ فَلَمَّا رَكَعَ وَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا قَالَ فَضَرَبَ أَيْدِيَنَا وَطَبَّقَ بَيْنَ كَفَّيْهِ ثُمَّ أَدْخَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ قَالَ فَلَمَّا صَلَّى قَالَ ‏ ‏إِنَّهُ سَتَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا ‏ ‏وَيَخْنُقُونَهَا ‏ ‏إِلَى ‏ ‏شَرَقِ الْمَوْتَى ‏ ‏فَإِذَا رَأَيْتُمُوهُمْ قَدْ فَعَلُوا ذَلِكَ فَصَلُّوا الصَّلَاةَ لِمِيقَاتِهَا وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ ‏ ‏سُبْحَةً ‏ ‏وَإِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَصَلُّوا جَمِيعًا وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَإِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيُفْرِشْ ذِرَاعَيْهِ عَلَى فَخِذَيْهِ ‏ ‏وَلْيَجْنَأْ ‏ ‏وَلْيُطَبِّقْ ‏ ‏بَيْنَ كَفَّيْهِ فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرَاهُمْ ‏

و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏ ‏أَنَّهُمَا دَخَلَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَجَرِيرٍ ‏ ‏فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ رَاكِعٌ ‏

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றபோது, “உங்களுக்குப் பின்நின்று (உரிய நேரத்தில் ஆளும் வர்க்கத்தினரான) அவர்கள் தொழுகின்றனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்” என்று கூறினார்கள். (பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை. நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரைத் தமது வலப்பக்கத்திலும் மற்றொருவரை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்கள்.

அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(து ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள் மீது அடித்துவிட்டு தம்மிரு உள்ளங்கைகளையும் ஒட்டி, தம் தொடைகளின் நடுவே நுழைத்துக் கொண்டார்கள்.

தொழுது முடித்ததும், “விரைவில் உங்களுக்குத் தலைவர்களாகச் சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, கடைசி நேரத்தில் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு செய்பவர்களை நீங்கள் காணும்போது, உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். அவர்களுடன் (மீண்டும்) தொழுவதைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முழங்கைகளைத் தொடைகளின் மீது சாத்திக் கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளைச் சேர்த்து, இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது” என்று அவர்கள் கூறிவிட்டு அவ்வாறு ஒட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) & அல்கமா (ரஹ்).

குறிப்பு :

1. இப்னு முஸ்ஹிர்(ரஹ்), ஜரீர் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்புகளில், “…ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் ருகூஉச் செய்து கொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தது இப்போதும் என் கண் முன்னே நிற்கிறது” என்று இபுனு மஸ்ஊது (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

2. ருகூஉவில் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும் முறை தொழுகையின் தொடக்கத்தில் இருந்திருக்கிறது. பின்னர் அம்முறை மாற்றப்பட்டு, (இப்போது வழக்கிலுள்ள) முழங்காலில் வைக்கும் முறை அறிமுகப் படுத்தப் பட்டது. மேற்காணும் நிகழ்வு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ருகூஉவில் உள்ளங்கைகளை முழங்காலில் வைக்கும் முறை, நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்களுக்கு மேற்காணும் நிகழ்வுவரை எத்தி வைக்கப் படாமல் இருந்திருப்பது புலனாகிறது.