அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 830

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَعَلْقَمَةَ ‏ ‏قَالَا ‏ ‏أَتَيْنَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏فِي دَارِهِ فَقَالَ أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ فَقُلْنَا لَا قَالَ فَقُومُوا فَصَلُّوا فَلَمْ يَأْمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ ‏

‏قَالَ وَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ فَأَخَذَ بِأَيْدِينَا فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ قَالَ فَلَمَّا رَكَعَ وَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا قَالَ فَضَرَبَ أَيْدِيَنَا وَطَبَّقَ بَيْنَ كَفَّيْهِ ثُمَّ أَدْخَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ قَالَ فَلَمَّا صَلَّى قَالَ ‏ ‏إِنَّهُ سَتَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا ‏ ‏وَيَخْنُقُونَهَا ‏ ‏إِلَى ‏ ‏شَرَقِ الْمَوْتَى ‏ ‏فَإِذَا رَأَيْتُمُوهُمْ قَدْ فَعَلُوا ذَلِكَ فَصَلُّوا الصَّلَاةَ لِمِيقَاتِهَا وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ ‏ ‏سُبْحَةً ‏ ‏وَإِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَصَلُّوا جَمِيعًا وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَإِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيُفْرِشْ ذِرَاعَيْهِ عَلَى فَخِذَيْهِ ‏ ‏وَلْيَجْنَأْ ‏ ‏وَلْيُطَبِّقْ ‏ ‏بَيْنَ كَفَّيْهِ فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرَاهُمْ ‏

و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏ ‏أَنَّهُمَا دَخَلَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَجَرِيرٍ ‏ ‏فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ رَاكِعٌ ‏

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றபோது, “உங்களுக்குப் பின்நின்று (உரிய நேரத்தில் ஆளும் வர்க்கத்தினரான) அவர்கள் தொழுகின்றனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்” என்று கூறினார்கள். (பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை. நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரைத் தமது வலப்பக்கத்திலும் மற்றொருவரை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்கள்.

அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(து ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள் மீது அடித்துவிட்டு தம்மிரு உள்ளங்கைகளையும் ஒட்டி, தம் தொடைகளின் நடுவே நுழைத்துக் கொண்டார்கள்.

தொழுது முடித்ததும், “விரைவில் உங்களுக்குத் தலைவர்களாகச் சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, கடைசி நேரத்தில் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு செய்பவர்களை நீங்கள் காணும்போது, உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். அவர்களுடன் (மீண்டும்) தொழுவதைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முழங்கைகளைத் தொடைகளின் மீது சாத்திக் கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளைச் சேர்த்து, இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது” என்று அவர்கள் கூறிவிட்டு அவ்வாறு ஒட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) & அல்கமா (ரஹ்).

குறிப்பு :

1. இப்னு முஸ்ஹிர்(ரஹ்), ஜரீர் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்புகளில், “…ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் ருகூஉச் செய்து கொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தது இப்போதும் என் கண் முன்னே நிற்கிறது” என்று இபுனு மஸ்ஊது (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

2. ருகூஉவில் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும் முறை தொழுகையின் தொடக்கத்தில் இருந்திருக்கிறது. பின்னர் அம்முறை மாற்றப்பட்டு, (இப்போது வழக்கிலுள்ள) முழங்காலில் வைக்கும் முறை அறிமுகப் படுத்தப் பட்டது. மேற்காணும் நிகழ்வு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ருகூஉவில் உள்ளங்கைகளை முழங்காலில் வைக்கும் முறை, நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்களுக்கு மேற்காணும் நிகழ்வுவரை எத்தி வைக்கப் படாமல் இருந்திருப்பது புலனாகிறது.

Share this Hadith:

Leave a Comment