அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1105

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

فُرِضَتْ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ

தொழுகை (ஆரம்பத்தில்) உள்ளூரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (தொடங்கியதுபோன்றே) நீடித்தது; உள்ளூரில் தொழும் தொழுகைகளில் (ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டன.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

மக்ரிபுத் தொழுகை, ஒரு ரக்அத் கூடுதல் செய்யப்பட்டு, பயணத்திலும் உள்ளூரிலிருக்கும்போதும் மூன்று ரக்அத்களானது. பயணத்தில் லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகியன இரண்டு ரக்அத்களாகவும் மாறுதல் இன்றியும் தொடர்ந்தன.

உள்ளூரிலிருக்கும்போது லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகியன இரண்டு ரக்அத் கூடுதல் செய்யப்பட்டு, நான்கு ரக்அத் தொழுகைகளாயின. ஸுப்ஹுத் தொழுகை, மாறுதல் ஏதுமின்றிப் பயணத்திலும் உள்ளூரிலிருக்கும்போதும் இரண்டு ரக்அத்ஆகவே தொடர்ந்தது.

Share this Hadith:

Leave a Comment