அத்தியாயம்: 6, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1323

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ الْمُزَنِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏قَرَأَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ فِي مَسِيرٍ لَهُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَرَجَّعَ ‏ ‏فِي قِرَاءَتِهِ ‏

‏قَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏لَوْلَا أَنِّي أَخَافُ أَنْ يَجْتَمِعَ عَلَيَّ النَّاسُ لَحَكَيْتُ لَكُمْ قِرَاءَتَهُ

“நபி (ஸல்), மக்கா வெற்றிப் பயணத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி அல்ஃபத்ஹு எனும் (48ஆவது) அத்தியாயத்தை ஓசை நயத்துடன் ஓதினார்கள்” என அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.

மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லையாயின் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) ஓதிக் காட்டியதைப் போன்று (ஓசை நயத்துடன்) உங்களிடம் நான் ஓதிக் காட்டியிருப்பேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) வழியாக முஆவியா பின் குர்ரா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment