அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1327

و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْهَادِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ خَبَّابٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏

‏أَنَّ ‏ ‏أُسَيْدَ بْنَ حُضَيْرٍ ‏ ‏بَيْنَمَا هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ إِذْ جَالَتْ فَرَسُهُ فَقَرَأَ ثُمَّ جَالَتْ أُخْرَى فَقَرَأَ ثُمَّ جَالَتْ أَيْضًا قَالَ ‏ ‏أُسَيْدٌ ‏ ‏فَخَشِيتُ أَنْ تَطَأَ يَحْيَى فَقُمْتُ إِلَيْهَا فَإِذَا مِثْلُ ‏ ‏الظُّلَّةِ ‏ ‏فَوْقَ رَأْسِي فِيهَا أَمْثَالُ ‏ ‏السُّرُجِ ‏ ‏عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا قَالَ ‏ ‏فَغَدَوْتُ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ أَقْرَأُ فِي ‏ ‏مِرْبَدِي ‏ ‏إِذْ ‏ ‏جَالَتْ ‏ ‏فَرَسِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَقَرَأْتُ ثُمَّ ‏ ‏جَالَتْ ‏ ‏أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَقَرَأْتُ ثُمَّ ‏ ‏جَالَتْ ‏ ‏أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَانْصَرَفْتُ وَكَانَ يَحْيَى قَرِيبًا مِنْهَا خَشِيتُ أَنْ تَطَأَهُ فَرَأَيْتُ مِثْلَ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ ‏ ‏السُّرُجِ ‏ ‏عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِلْكَ الْمَلَائِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ

நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் மீண்டும் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக்கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சி, அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்ற ஒன்றை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் (மின்னும்) ஒளிவிளக்குகள் போன்றவை இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காண முடியவில்லை.

காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது என் குதிரை கடுமையாக மிரண்டது” என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது” என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது” என்று சொன்னேன். “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மீண்டும்) கூறியபோது, “(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் (படுத்துறங்கிக்கொண்டு) இருந்தான். எனவே, நான் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் (மின்னும்) ஒளிவிளக்குகள் போன்றவை இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது, உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் அடையாளம். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸைத் பின் ஹுளைர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment